ADDED : ஜூன் 06, 2014 10:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நமக்குள் உயிர் நிகழ்வதைப் போல மரணமும் நிகழும். உங்களுக்குள் இந்த விழிப்புணர்வு எப்போதும் இருந்தால், வாழ்வை முழுமையாகவும், தீவிரமாகவும் வாழலாம்.
* உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்தது போல் இருந்தால், நீங்கள் அறியாமையிலேயே தேங்கி இருப்பது நிச்சயம்.
* மனிதனுக்கு இரண்டு விதமான சாத்தியங்கள் உள்ளன. ஒன்று அவன் அசாத்தியமாக வளரலாம் அல்லது இருக்கும் நிலையிலேயே தேங்கிப் போகலாம். தேர்வு அவன் கையில்.
* ஆன்மீகச் செயல்முறை என்பது மேல்நோக்கிப் பார்ப்பதோ, கீழ்நோக்கிப் பார்ப்பதோ அல்ல, உள்நோக்கிப் பார்ப்பது.
சத்குரு ஜக்கிவாசுதேவ்